தென்னையை சூறையாடும் வெள்ளை ஈக்களால் இளநீ கிடைக்குமா?கோடையில் உற்பத்தி குறைந்துள்ளதால் கவலை
உடுமலை:தென்னை சாகுபடியில், மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல் வேகமாக பரவி, இளநீருக்கென பராமரிக்கப்படும் மரங்களில், உற்பத்தி பாதியாக குறைந்துள்ளதால், கோடை காலத்தில் தேவையை பூர்த்தி செய்வது கேள்விக்குறியாகியுள்ளது. சிறப்புக்குழு அமைத்து, பொருளாதார சேதம் தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், காய்கறி சாகுபடியை கைவிட்டு, புதிதாக தென்னங்கன்று நடவு செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.சாகுபடி பணிகள், கொப்பரை உற்பத்தி, தென்னை நார் உற்பத்தி, தடுக்கு பின்னுதல் என கிராமப்புறத்தில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்; கிராமப்புற பொருளாதாரத்தில்,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment