6000 பேரை வீட்டுக்கு அனுப்பிய பிரபல நிறுவனங்கள்! காரணம் என்ன? ஓலா, மீஷோ etc.......,?1723084985


6000 பேரை வீட்டுக்கு அனுப்பிய பிரபல நிறுவனங்கள்! காரணம் என்ன? ஓலா, மீஷோ etc.......,?


இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலதனத்தை திரட்டுவதிலும், அவற்றின் மதிப்பீட்டை அதிகரிப்பதிலும் தங்களது குறிப்பிடத்தக்க அடையாளத்தை பதித்து வருகின்றன. வென்ஞ்சர் இண்டெலிஜென்ஸ் அறிக்கையின் படி, 2022ம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலாண்டு கணக்கில் இந்திய ஸ்டார்ட்அப்கள் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளன. இதே ஆண்டு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் 5.7 பில்லியன் டாலர்களை திரட்டியுள்ளன. தற்போது அதைவிட 50 சதவீதம் அதிகமாக முதலீடு திரட்டப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்குப் பிறகு, நிறுவனங்கள் தங்கள் நிதிநிலை அறிக்கையை ஒழுங்கமைக்க முயன்று வருகின்றன. பிசினஸ் இன்சைடரின் கணக்கீடுகளின்படி, இந்திய ஸ்டார்ட்அப்கள் 6,900க்கும் மேற்பட்ட ஊழியர்களை விடுவித்துள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 3000 பணியாளர்களை Better.com 3,000 பணி நீக்கம் செய்துள்ளது.

பெட்டர் டாட் காம்:

அமெரிக்காவைச் சேர்ந்த வீட்டு வசதி கடன் நிறுவனம் பெட்டர் டாட் காம் (Better.com) மார்ச் 2022 இல், அதன் அமெரிக்கா மற்றும் இந்தியா அலுவலகத்தைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது., நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்நிறுவனத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் இருந்தே அதிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஓலா:

கால்டாக்சி ஒருங்கிணைப்பு நிறுவனமான ஓலா, அதன் ஊழியர்கள் 2,100 ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. 200 டார்க் ஸ்டோர்களையும் மூட உள்ளதாக ஓலா நிறுவனம் அறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்அகடாமி:

எஜூடெக் எனப்படும் கல்வி துறையில் கவனம் செலுத்து வரும் அன்அகடாமி என்ற நிறுவனம் வருவாய் இழப்பு காரணமாக பிப்ரவரியில் 600 பணியாளர்களை வேலையை வீட்டு நீக்கியுள்ளது. இது தனது மொத்த பணியாளர்களில் 10 சதவீதம் என தனது நிறுவனம் குறிப்பிட்டுள்ள நிலையில், 325 பகுதி நேர பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரெல்:

லைஃப் ஸ்டைலை மையமாகக் கொண்ட சமூக வர்த்தக தளமான ட்ரெல், இந்தியாவின் பல்வேறு அலுவலகங்களில் கிட்டத்தட்ட 50 சதவீத பணியாளர்களை அல்லது சுமார் 300 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லிடோ லேர்னிங்:

எஜூடெக் துறையைச் சேர்ந்த மற்றொரு கல்வி தொடர்பான லிடோ லேர்னிங் நிறுவனம் பிப்ரவரி 2022ல் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் செயல்திறன் குறைவாக இருந்ததாகவும், அலுவலகத்திற்கு சரியாக வரவில்லை என்றும் நிறுவனம் விளக்கம் அளித்தது.

ஃபர்லென்கோ:

ஃபர்னிச்சர்களை வாடகைக்கு விடும் ஸ்டார்ட்அப் ஃபர்லென்கோ, புனே, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் போன்ற பல்வேறு மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் நிறுவனம் தனது செயல்பாடுகளை குறைத்து வருவதால், 180-200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மீஷோ:

சாப்ட் பேங்க் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான மீஷோ, அதன் மளிகை வணிக பிரிவில் இருந்து 150 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மீஷோ சூப்பர்ஸ்டோர் என மறுசீரமைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு ஊழியர்களை பணி நீக்கம் செய்தது விமர்சனத்திற்கு உள்ளானது.

ஓகே கிரெடிட்:

டிஜிட்டல் லெட்ஜர் எனப்படும் கணக்கு வழக்குகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஓகே கிரெடிட் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் குழுக்களில் இருந்து சுமார் 30-40 பணியாளர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog