எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் அதில் 'தாமரை மலரும்' பிரதமர் மோடி பதிலடி!! டெல்லி: பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் ஓடி ஒளிந்தது இல்லை என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதிலளித்து பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் அதில் தாமரை மலரும் என்றும் மோடி பேசினார். நாடாளுமன்றம் கடந்த மாதம் 31-ந் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். திரவுபதி முர்மு குடியரசுத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றியது இதுவே முதல் முறை ஆகும். நாட்டின் முன்னேற்றங்கள் குறித்தும், எதிர்கால கனவு உள்ளிட்டவை குடியரசுத்தலைவர் உரையில் முக்கிய அம்சமாக இருந்தது. நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் 2 நாட்களில் சுமார் 12 மணி நேர விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு நேற்று பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது எதிர்க்கட்